பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்போம் !
1953ஆம் ஆண்டு ஹர்த்தாலுக்குப் பின்னர் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட மிக அற்புதமான மக்கள் போராட்டம் தற்போது அரங்கேறியுள்ளது. இந்தப் போராட்டத்தின் பலத்தைக் கண்டு அமைச்சரவை பதவி விலக நேரிட்டது. அரசாங்கத்தின் கூட்டாளிகள் பாராளுமன்றத்தில் "சுதந்திரம்" அறிவித்தனர். மத்திய வங்கியின் ஆளுநர் கப்ரால் பதவி விலகியுள்ளார்.